கோவில்பட்டி அருகே தீக்குளித்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கோவில்பட்டியையடுத்த வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் ராமர், பால் வியாபாரி. இவரது மனைவி பாண்டியம்மாள்(40). மனநிலை பாதிக்கப்பட்ட இவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








