நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

"குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும்'

நாசரேத் பேரூராட்சியில் குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார் செயல்அலுவலர் கே.ஆர்.பி.மணிமொழிசெல்வன் ரங்கசாமி.

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

நாசரேத் பேரூராட்சியில் குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார் செயல்அலுவலர் கே.ஆர்.பி.மணிமொழிசெல்வன் ரங்கசாமி.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்கள், வீடுகள்தோறும் தள்ளுவண்டிகள் மூலம் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்களிடம்,  மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தரம் பிரித்து வழங்கி பொதுசுகாதாரத்தை பேணிக்காக்க நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். கோடையில் குடிநீர்த் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
மேலும், குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் எந்தவித முன்அறிவிப்புமின்றி மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு, குடிநீர் இணைப்பையும் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.