அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

உடன்குடியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் உடன்குடியில்  புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 12:28 am

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் உடன்குடியில்  புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் மாவட்டத் தலைவர் பி.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிவசெந்தில்,  கவிஞர் பூவெழில், நகரச் செயலர் ராமமூர்த்தி, மாவட்ட விவசாய அணி தலைவர் கவாஸ்கர், வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவர் தேவராஜ், வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா, நிர்வாகிகள் திருமணி, வெற்றிவேல், அழகுவேல், வைரவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வட்டாரத் தலைவர் துரைராஜ் ஜோசப் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைததார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், மாவட்டப் பொருளாளர் நடராஜன், சிவனேசன் உள்ளிட்டோர் பேசினர்.
பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். நிறுத்தப்பட்ட சிற்றுந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். உடன்குடி பேருந்து நிலையத்துக்குள் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணிகளுக்கு கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஏற்பாடுகளை மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் லி.முத்துகுமார் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.