தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் கடனுதவி விண்ணப்பங்கள் பெறும் முகாம் கோவில்பட்டியில் புதன்கிழமை (அக். 24) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு வங்கிகள் வழியாக அரசு மானியத்துடன் கூடிய தொழிற் கடனுதவி பெறும் விதத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
நிகழாண்டில், இந்தத் திட்டங்களின்கீழ் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் சேகரிக்கும் வகையில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை (அக். 24) முற்பகல் 11 மணிக்கு முகாம் நடைபெறுகிறது. தொடர்ந்து, 31 ஆம் தேதி கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது.
முகாமின்போது, அரசு அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், சிட்கோ கிளை மேலாளர் கலந்துகொண்டு கடனுதவி திட்டங்கள் குறித்தும், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் பற்றியும் விவரங்களை எடுத்துக்கூறுவதுடன் புதிய தொழில்கள் தொடங்குவது குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள்.
தகுதிவாய்ந்த தொழில் முனைவோர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் பற்றி ஆலோசனை வழங்கப்படும். இளைஞர்கள், தொழில் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் ஏற்கெனவே குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள் முகாம்களில் கலந்து கொண்டு அரசு மானியம் மற்றும் கடனுதவி திட்டங்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: வெப்பத்தை தணித்தது

வாக்கு எண்ணும் மையங்களில் ‘க்யூஆா்’ குறியீடு அடையாள அட்டை - தோ்தல் ஆணையம் அறிமுகம்

யுஜிசி நெட் தோ்வு: இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்
வடமேற்கு தில்லி: கொள்ளை வழக்கில் வீட்டுப் பணிப்பெண் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

