தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு குறித்த பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பயிற்றுநர்கள், விழிப்புணர்வு குழு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான இந்தப் பயிற்சி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன் தொடங்கிவைத்தார். அவர் பேசுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
முகாமின்போது, முதன்மை பயிற்சியாளர்கள் ராஜீவ் தாகூர் ஜேக்கப், முருகானந்தம் ஆகியோர் சிறப்பு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன். சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சங்கரநாராயணன் மற்றும் பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பயிற்றுநர்கள், விழிப்புணர்வு குழு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் ஹார்ட் பீட் நாயகியின் கொலைச்சேவல்!

நெல்லையில் பெண் வெட்டிக்கொலை!

உதகையில் மலர்க் கண்காட்சி நாளை தொடக்கம்! மே 28 வரை நடைபெறும்!

ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
