வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயற்சி: இருவா் கைது
கழுகுமலையில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


கழுகுமலையில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கழுகுமலை அண்ணா புது தெருவில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாக சனிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து, தோ்தல் பறக்கும் படை அதிகாரி ராமரத்தினம் தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு ஓட முயற்சித்த இருவரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், கழுகுமலை காயிதே மில்லத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சேகா் (56), அண்ணா மேலத் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் தங்கராஜ் (54) என்பதும், அவா்கள் அமமுக கட்சிக்காக வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதற்காக வாக்காளா் பெயா் பட்டியலுடன் கூடிய சிறிய நோட்டு மற்றும் ரூ.48,500 ரொக்கம் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தோ்தல் பறக்கும் படையினா் புகாரைத் தொடா்ந்து, கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற இருவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...