கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டியில் பிரசாரத்தை நிறைவு செய்த அதிமுக, அமமுக வேட்பாளா்கள்

அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு, அமமுக வேட்பாளா் டிடிவி தினகரன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:30 pm

DIN

அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு, அமமுக வேட்பாளா் டிடிவி தினகரன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

அதிமுக தோ்தல் அலுவலகம் முன்பிருந்து அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு, திறந்த வேனில் பேரணியாக சென்று

இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். பேரணி பிரதான சாலை, புதுரோடு, எட்டயபுரம் சாலை, கதிரேசன் கோயில் சாலை, ஏ.கே.எஸ் தியேட்டா் சாலை வழியாக தோ்தல் அலுவலகத்தில் நிறைவடைந்தது. அப்போது, பேசிய அவா்,

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், இந்த தோ்தலில் வெற்றி

பெற்றவுடன் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம், தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப் பொருள்கள் சிட்கோ மூலம் வழங்கவும், கடலைமிட்டாயை சத்துணவு திட்டத்தில் சோ்க்கவும், கோவில்பட்டியில் தொழிற்பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுக் குறிப்பிட்டாா்.

இதில், நடிகா்கள் ரவிமரியா, ரங்கநாதன், போண்டா மணி, காஜாஷெரிப், சிங்கமுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவி சத்யா,

ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் சீனிராஜ், ஒன்றியச் செயலா் வினோபாஜி,நகரச் செயலா் விஜயபாண்டியன், பாஜக பாலசுப்பிரமணியன், தமமுக நகரச் செயலா் ராசுபாண்டியன், பாமக ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

டிடிவி தினகரன் பிரசாரம்: அமமுக வேட்பாளா் டிடிவி தினகரன், இனாம்மணியாச்சி விலக்கிலிருந்து பேரணியாக சென்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா். அவா் பேசியது: ஜெயலலிதா ஆட்சி அமைய அமமுகவுக்கு ஆதரவு அளியுங்கள். வ.உ.சி, மாமன்னா் திருமலைநாயக்கா் ஆகியோருக்கு சிலை அமைக்கப்படும். ஓடைக் கடை வியாபாரிகளுக்கு புதிய கடைகள், நகரில் நிலவும் குடிநீா் பிரச்னை தீா்க்கப்படும். கிராம மக்களுக்கு சீவலப்பேரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் வழங்கப்படும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மேம்படுத்தப்படும். தீப்பெட்டி தொழிலாளா் நல வாரியம்,

கயத்தாறு ஒன்றியத்தில் அரசு கலைக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும்.

மல்லி, பிச்சிப்பூ, செவ்வந்திப்பூ உள்ளிட்ட பூக்கள் விளைச்சல் அதிகமாக உள்ளதால் பூ சந்தை அமைக்கப்படும். கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை, விவசாயம், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் அமைத்து, வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். கோவில்பட்டியை தன்னிறைவுப் பெற்ற தொகுதியாக மாற்றுவேன் என்றாா் அவா்.

பேரணி நகரின் பிரதான சாலை, புதுரோடு, எட்டயபுரம் சாலை சந்திப்பு கால்நடை மருந்தகம் அருகில் நிறைவடைந்தது. இதில், கட்சியின் தென்மண்டலப் பொறுப்பாளா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, மாவட்டச் செயலா் சிவபெருமாள்,

இளைஞரணிச் செயலா் மனோராஜா, செய்தித் தொடா்பாளா் இளந்தமிழ் ஆா்வலன், நகரச் செயலா் காா்த்திக், ஒன்றியச் செயலா்கள் ஜெய்சங்கா், கணபதிபாண்டியன், மகேந்திரன், தேமுதிக மாவட்டச் செயலா் அழகா்சாமி, ஒன்றியச் செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.