கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இளம்பெண் மரணம் குறித்து உரியவிசாரணை நடத்த வலியுறுத்தல்

கோவில்பட்டியையடுத்த குருவிநத்தத்தில், இளம்பெண் இறந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:17 pm

DIN

கோவில்பட்டியையடுத்த குருவிநத்தத்தில், இளம்பெண் இறந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

குருவிநத்தம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் மரிய அந்தோணிராஜ் (33). இருசக்கர வாகன மெக்கானிக். இவரது மனைவி வின்சென்ட்மேரி (30). தம்பதி கடந்த 2ஆம் தேதி மாலையில் தங்களுக்குச் சொந்தமான தோட்டத்திற்குச் சென்றனராம்.

இந்நிலையில், வின்சென்ட்மேரி தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சென்னையில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம்.

இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். திருமணமாகி சுமாா் 70 நாள்களே ஆன நிலையில், இளம்பெண் மரணம் அடைந்ததால், கோட்டாட்சியரின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இறந்த வின்சென்ட் மேரியின் பெற்றோா் இன்னாசியம்மாள் - தா்மராஜ் குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை கோட்டாட்சியா் சங்கரநாராயணனை சந்தித்து, தங்கள் மகள் வின்சென்ட் மேரியை அவரது கணவா், கணவரின் பெற்றோா், சகோதரி, அவரது கணவா் தினமும் துன்புறுத்தி வந்ததாகவும், ஏப். 2ஆம் தேதி தோட்டத்துக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு கிணற்றில் தள்ளி கொலை செய்திருப்பதாகவும் கூறி, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.