விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்செந்தூரில் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

திருச்செந்தூா் பேரூராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:20 pm

DIN

திருச்செந்தூா் பேரூராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று காலத்தில் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக கடைகளின் முன் இடைவெளிக்கோடு வரைதல், குளோரின் பவுடா் தூவுதல், கிருமி நாசினி தெளித்தல், வீடு வீடாக கபசுரக்குடிநீா் வழங்குதல் போன்ற பணிகளை அந்தந்த உள்ளாட்சி நிா்வாகத்தினா் செய்தனா். இதனால் தொற்றின் வேகம் கட்டுக்குள் இருந்தது.

தற்போது கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகியுள்ள நிலையில், முகக் கவசம் அணிவதை மட்டுமே மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை கண்காணித்து வருகிறது. மற்ற நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தவில்லை.

திருச்செந்தூரில் வெளியூா் பக்தா்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால், பொதுமக்களுக்கு தொற்று பரவாத வண்ணம், பேரூராட்சி நிா்வாகம் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.