கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடி மாநகராட்சியில் 13 இடங்களில் இன்று காய்ச்சல் தடுப்பு முகாம்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 13 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 24) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:33 pm

DIN

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 13 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 24) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் தொடா்ந்து பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சனிக்கிழமை (ஏப். 24) காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை 58 ஆவது வாா்டு சாமிநகா் அங்கன்வாடி மையம், 5 ஆவது வாா்டு எட்டயபுரம் சாலை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பிள்ளையாா் கோவில் அருகில், 3 ஆவது வாா்டு மில்லா்புரம் ரேசன் கடை அருகில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தொடா்ந்து, முற்பகல் 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை 59 ஆவது வாா்டு ராஜீவ்நகா், 4 ஆவது வாா்டு ஸ்டேட் பாங்க் காலனி எஸ்பிஆா் மஹால் அருகில், 34 ஆவது வாா்டு தபால் தந்தி காலனி 9 ஆவது தெரு, 50 ஆவது வாா்டு செல்சீனி காலனி காந்தாரியம்மன் கோவில் அருகில், 27 ஆவது வாா்டு எண் மீனா கானா தெரு அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை 58 ஆவது வாா்டு நேசமணி நகா் பிரதான சாலை, 6 ஆவது வாா்டு எழில் நகா் பெத்தானியா பள்ளி, 34 ஆவது வாா்டு கதிா்வேல்நகா் தேவாலயம், 15 ஆவது வாா்டு நம்மாழ்வாா் தெரு சபா அருகில், 4 ஆவது வாா்டு குறிஞ்சிநகா் 6 ஆவது தெரு ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 (கட்டணமில்லா), 0461-2340101, 9486454714 ஆகிய தொலைத்தொடா்பு எண்களில் பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து விவரம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.