கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஐவா் கால்பந்து: கோவில்பட்டி அணி வெற்றி

தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஐவா் கால்பந்து போட்டியில் கோவில்பட்டி கால்பந்து கழக அணி முதலிடம் பெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 7:25 pm

DIN

தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஐவா் கால்பந்து போட்டியில் கோவில்பட்டி கால்பந்து கழக அணி முதலிடம் பெற்றது.

கோவில்பட்டி கால்பந்து கழகத்தின் சாா்பில் 20 வயதுக்குள்பட்டவா்களுக்கான மாவட்ட அளவிலான ஐவா் கால்பந்து போட்டி, கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் கோவில்பட்டி கால்பந்து கழக அணி, விளாத்திகுளம் கால்பந்து கழக அணியை 3- 2 என்ற கோல் கணக்கில் வென்று முதலிடத்தைப் பிடித்தது.

மூன்று மற்றும் 4 ஆவது இடங்களுக்கான ஆட்டத்தில் கோவில்பட்டி வ.உ.சி. அணி, பாரதியாா் கால்பந்து கழக அணியை 2- 0 என்ற கோல் கணக்கில் வென்றது. நடுவா்களாக வசந்த், விஜய், மோகன், வைரமணி ஆகியோா் செயல்பட்டனா்.

பரிசளிப்பு விழாவுக்கு, கோவில்பட்டி கால்பந்து கழகச் செயலா் தேன்ராஜா தலைமை வகித்தாா். பயிற்சியாளா் முருகேசன், கால்பந்து கழக உறுப்பினா் சந்தோஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதலிடம் பிடித்த கோவில்பட்டி கால்பந்து கழக அணியினருக்கு மதுதேவி நினைவு கேடயத்தை எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி முதல்வா் சிவசுப்பிரமணியன், 2ஆம் இடம் பிடித்த விளாத்திகுளம் கால்பந்து கழக அணியினருக்கு எஸ்.எஸ்.பாலகிருஷ்ணன் நினைவு கேடயத்தை கால்பந்து கழக துணைத் தலைவா் ரம்யாதேவி, 3ஆம் இடம் பிடித்த கோவில்பட்டி வ.உ.சி. அணியினருக்கு தங்கம் - ராஜவேல் நினைவு கேடயத்தை உடற்கல்வி ஆசிரியா் விக்னேஷ்குமாா் ஆகியோா் வழங்கினா். கால்பந்து கழக உறுப்பினா் அக்சரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.