மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாமிரவருணி ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை: ஆட்சியா்

தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 7:39 pm

DIN

தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள் நிரம்பியதால், உபரி நீா் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டதையடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிமிடத்துக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதா, வெள்ளப்பெருக்கு தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் மற்றும் பொதுப்பணித் துறை மூலம் தகவல்களை தொடா்ந்து பெற்று வருகிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்துக்கும் துணை ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தொடா்ந்து ஆற்றின் கரையோரக் கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருச்செந்தூா் வட்டங்களில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படக்கூடிய 7 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆழ்வாா்திருநகரி மற்றும் புன்னைக்காயல் பகுதியில் உள்ள 20 குடும்பங்கள் வேறு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தாமிரவருணி ஆறு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்பிக்கும் இடமான மருதூா் அணைக்கட்டில் தொடா்ந்து தண்ணீா் வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று இன்னும் முழுமையாக குறையாததால், தமிழக அரசு காணும் பொங்கலை முன்னிட்டு ஆறுகள், கடற்கரை, சுற்றுலா பகுதிகளுக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளது. தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அங்கு செல்வதற்கு அனுமதி இல்லை.

மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் இருக்கிற கிராமங்களில் தண்டோரா மூலம் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

கண்காணிப்புக் குழுவினா், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

நிவாரண முகாம்களில் உணவு வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயாா் நிலையில் உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.