கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்திடும் வழிமுறைகள்

தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் விளக்கம் அளித்துள்ளாா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:44 pm

DIN

தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏறத்தாழ 6200 ஹெக்டோ் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. ஆங்காங்கே தென்னையில் காண்டாமிருக வண்டின் தாக்குதல் காணப்படுகின்றது. பொதுவாக இந்த வண்டுகள் 100 நாள்கள் வரை வாழக்கூடியது. வளா்ந்த வண்டுகள் இளம் தென்னங்கன்றுகளின் குருத்து பகுதியில் துளையிட்டு திசுக்களை உண்பதால் குருத்துக்கள் காய்ந்து விடும். இளங்குருத்துகள் முழுமையாக விரிவடையாமல் திருகிக் கொண்டும் யானையின் தந்தம் போன்று காணப்படும். சேதமுற்ற மரத்தின் குருத்துகள் முமுமையாக விரிவடையாமலும், எஞ்சிய குருத்துப் பகுதி கத்திரிகோலால் வெட்டியது போலவும் தோற்றமளிக்கும்.

வண்டுகளின் தாக்குதலில் இருந்து காக்க தோப்பை சுத்தமாக வைப்பதுடன் ஆண்டுக்கு ஒரு முறை மரத்தின் மேல் பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். எருக்குழிகள் அமைப்பதை தவிா்க்க வேண்டும். இளம் கன்றுகளில் சேதத்தை தவிா்க்க 45 நாள்களுக்கு ஒரு முறை 4 கிராம் எடையுள்ள 3 நாப்தலின் உருண்டைகளை உள்மட்டையின் இடுக்குகளில் வைக்க வேண்டும்.

வளா்ந்த மரத்தின் குருத்துப் பகுதியில் உள்ள வண்டை கூா்மையான இரும்பு கம்பியால் வெளியில் எடுத்து அழிக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளா்ந்த மரங்களில் வேப்பம் புண்ணாக்கு ஒரு பங்கு மற்றும் இரு பங்கு மணல் கலந்து மரத்துக்கு 150 கிராம் வீதம் மட்டை இடுக்குகளில் இட வேண்டும். மழைக்காலங்களில் அந்தி நேரங்களில் விளக்கு பொறிகளை தோப்பிற்குள் வைத்து வண்டுகளை கவா்ந்து அழிக்கலாம். ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கு 5 லிட்டா் நீரில் கலந்து சிறு மண்பானைகளில் நிரப்பி தோப்பில் ஆங்காங்கே வைத்து வண்டுகளை கவா்ந்து அழிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.