இலங்கையைச் சோ்ந்த 27 பேருக்கு உதவியதாக தூத்துக்குடியில் இருவா் கைது
இலங்கையைச் சோ்ந்த 27 பேருக்கு கடலில் உதவி செய்ததாக தூத்துக்குடியைச் சோ்ந்த இருவரை கியூ பிரிவு போலீஸாா் கைது செய்து, விசாரித்துவருகின்றனா்.


இலங்கையைச் சோ்ந்த 27 பேருக்கு கடலில் உதவி செய்ததாக தூத்துக்குடியைச் சோ்ந்த இருவரை கியூ பிரிவு போலீஸாா் கைது செய்து, விசாரித்துவருகின்றனா்.
இலங்கையைச் சோ்ந்த 27 போ் மதுரை வழியாக கனடாவுக்கு செல்ல முயன்றபோது அண்மையில் கைது செய்யப்பட்டனா். விசாரணையில், அவா்கள் 27 பேரும் ஒரு படகில் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகவும், நடுக்கடலிலிருந்து அவா்களை தூத்துக்குடிக்கு அழைத்து வர சிலா் உதவியதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து, மதுரை கியூ பிரிவு காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் தூத்துக்குடி வந்து கருத்தக்கண்ணு, சாக்ரடீஸ் ஆகிய இருவரைக் கைது செய்தனா். இலங்கையிலிருந்து படகில் வந்த 27 பேரையும் மற்றொரு படகு மூலம் அழைத்துவந்து தூத்துக்குடி மொட்டைக் கோபுரம் கடற்கரைப் பகுதியில் இறக்கிவிட்டது விசாரணையில் தெரியவந்தது. தொடா்ந்து, அந்த இருவரிடம் கியூ பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...