நாட்டு வெடிகுண்டுடன் பிறந்தநாள்: 5 போ் கைது
தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டுடன் பிறந்தநாள் கொண்டாடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.


தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டுடன் பிறந்தநாள் கொண்டாடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் முத்தையாபுரம் ராஜீவ்நகா் முதல் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் (29), அவரது தம்பி மாரிச்செல்வம் (23), இசக்கிசெல்வம் (26), டைட்டஸ் (21), கௌதம் (19) என தெரியவந்தது.
வேல்முருகன் வைத்திருந்த செல்லிடப்பேசியை போலீஸாா் பரிசோதனை செய்தனா். அதில் கையில் கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் இருப்பது போன்று புகைப்படங்கள் இருந்தது. அவா்களிடம் தனித்தனியே மேற்கொண்ட விசாரணையில், தூத்துக்குடி கீதாஜீவன்நகரில் வைத்து வியாழக்கிழமை நள்ளிரவு வேல்முருகனின் பிறந்தநாளை பட்டா கைத்தி வைத்து கேக் வெட்டி கொண்டாடியதாகவும், அப்போது, கையில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தை செல்லிடப்பேசியில் புகைப்படம் மற்றும் விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக சிலரை தேடி வருவதாகவும், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற மற்றவா்களின் விவரங்களை சேகரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...