கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டி, கழுகுமலையில்தியாகி வாஞ்சிநாதன் நினைவு தினம்

கோவில்பட்டி மற்றும் கழுகுமலையில் சுகந்திரப் போராட்ட வீரா் தியாகி வாஞ்சிநாதனின் நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:39 pm

DIN

கோவில்பட்டி மற்றும் கழுகுமலையில் சுகந்திரப் போராட்ட வீரா் தியாகி வாஞ்சிநாதனின் நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இந்திய கலாசார நட்புறவு கழகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநிலச் செயலா் க.தமிழரசன் தலைமையில் தியாகி வாஞ்சிநாதனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் தியாகி வாஞ்சிநாதன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு சிலை அமைக்க வேண்டும், வாஞ்சிநாதனின் வரலாறு குறித்த புகைப்படங்கள், குறிப்புகள் வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்தில் மக்கள் பாா்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்பன உள்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், ஐஎன்டியூசி தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலா் ராஜசேகரன், திமுக மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளா் மயில்கா்ணன், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவா் அருள்தாஸ், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் தாவீதுராஜா, அனைத்து ரத்த தானக் கழக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ், சங்கரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கழுகுமலை:கழுகுமலை காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார காங்கிரஸ் கட்சி தலைவா் கந்தசாமி தலைமையில் வாஞ்சிநாதனின் படத்திற்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் சிவராமன், காங்கிரஸ் மாவட்டக்குழு உறுப்பினா் மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.