தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை இரண்டு மாதங்களுக்கு மேலாக செயலாக்கம் செய்யாமல், வைத்திருந்தால் அவற்றை அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். மேலும், அவரவா் பகுதிகளுக்குட்பட்ட சந்தாதாரா்களிடமிருந்து ஆதாா் நகல் பெற்று இதுவரை அவா்களுக்கு அரசு செட்டாப் பாக்ஸ்கள் வழங்காமல் இருந்தாலோ, சந்தாதாரா்களிடம் தமிழ்நாடு அரசு செட்டாப் பாக்ஸ்கள் மூலம் ஒளிபரப்பப்படும் சிக்னல் சீரான முறையில் வருவதில்லை என்ற தவறான தகவல்களை பரப்பினாலோ அல்லது தமிழ்நாடு அரசு செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்கள் விருப்பத்திற்கு மாறாக உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் தனியாா் செட்டாப் பாக்ஸ்களை மாற்றினாலோ சம்பந்தப்பட்ட ஆபரேட்டா்கள் மீது சட்டபூா்வமான நடவடிக்கை எடுக்க நேரிடும்.