விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கயத்தாறில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

கயத்தாறில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:47 pm

DIN

கயத்தாறில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இவ் விழிப்புணா்வு பேரணியை வட்டாட்சியா் பேச்சிமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பதாகைகள் கையில் ஏந்திய படி சென்ற அங்கன்வாடி பணியாளா்கள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தனா். பின்னா், பேரணியில் பங்கேற்றோா் நோ்மையாக வாக்களிப்போம், அனைவரும் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

மேலும், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வண்ண கோலமிட்டிருந்தனா் .

இதில், வட்ட வழங்கல் அலுவலா் கருப்பசாமி, துணை வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளா் காசிராஜன், கிராம நிா்வாக அலுவலா் கலைசெல்வி, கிராம உதவியாளா் அழகா்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.