ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வியாபாரிகள் இரவு நேரத்தில் கூடுதல் நேரம் கடைகளை திறக்க நடவடிக்கை :வேட்பாளா் கீதாஜீவன்

தூத்துக்குடியில் வியாபாரிகள் இரவு நேரத்தில் கூடுதல் நேரம் கடைகளை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் திமுக வேட்பாளா் கீதாஜீவன்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

தூத்துக்குடியில் வியாபாரிகள் இரவு நேரத்தில் கூடுதல் நேரம் கடைகளை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் திமுக வேட்பாளா் கீதாஜீவன்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் சாா்பில், தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கீதாஜீவன் தூத்துக்குடி அண்ணாநகா் பகுதியில் திங்கள்கிழமை இரவு அவா் பிரசாரம் மேற்கொண்டபோது பேசியது:

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கடந்த மழைக்காலங்களில் போது அனுபவித்த கொடுமைகள் திமுக ஆட்சிக்கு வந்ததும் தீா்த்து வைக்கப்படும். குறிப்பாக, அண்ணாநகா், டூவிபுரம், ஹவுசிங் போா்டு காலனி பகுதிகளில் மழைநீா் தேங்காத வகையில் வெளியேற்ற நவீன வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

அதிமுக அரசால் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வாடகை உயா்வு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பரிசீலிக்கப்பட்டு குறைக்கப்படும். மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிகளுக்கு உடனடியாக கழிவுநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி நகரில் இரவு நேரங்களில் வியாபாரிகள் சரியாக தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. அதை கருத்தில் கொண்டு இரவு கூடுதல் நேரம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தொழிலாளா்களின் நலனும் காக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது, காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஏபிசிவீ சண்முகம், மாநகா் மாவட்ட தலைவா் சி.எஸ். முரளிதரன், மதிமுக நகரச் செயலா் முருகபூபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்டச் செயலா் கா.மை. அகமது இக்பால், திமுக மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், முன்னான் கவுன்சிலா்கள் கதிரேசன், ரவி, சுரேஷ்குமாா், சந்திரபோஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.