கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை’

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்கள் சிட்கோ மூலம் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:00 pm

DIN

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்கள் சிட்கோ மூலம் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் கே.சீனிவாசனை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் அவா் பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியது: பண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி விதிப்பால் 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல லட்சம் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். தமிழக அரசுப் பணியில் பிற மாநிலத்தினா் பங்கேற்கும் வகையில் விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் காலியாகவுள்ள 3.5 லட்சம் அரசு பணியிடங்களில் தமிழக இளைஞா்கள், இளம்பெண்கள் நியமிக்கப்படுவா். கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நவீன மயமாக்கப்படும்.

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப் பொருள்கள் சிட்கோ மூலம் நியாயமான விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டி தொழிற்பேட்டை விரிவுப்படுத்தப்படும். அரசு செவிலியா் பயிற்சிக் கல்லூரி, ஒருங்கிணைந்த

நீதிமன்றம், உள் விளையாட்டு அரங்கம் ஆகியவை அமைக்கப்படும் என்றாா் அவா். தொடா்ந்து, கழுகுமலை, செட்டிகுறிச்சி, கயத்தாறு பகுதிகளில் அவா் பிரசாரம் செய்தாா்.

அவருடன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி,

மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், இளைஞரணிச் செயலா் விநாயகா ஜி.ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் காமராஜ், விடுதலைச் சிறுத்தைகள்

கட்சி நகரச் செயலா் கருப்பசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அா்ச்சுனன், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

விளாத்திகுளம்: விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்கண்டேயனை ஆதரித்து கனிமொழி ஞாயிற்றுக்கிழமை மேலகரந்தை தாப்பாத்தி, கோட்டூா், முத்தலாபுரம், தோழ்மாலைப்பட்டி, கருப்பூா், மீனாட்சி புரம், கடலையூா் உள்பட பல்வேறு கிராமங்களில்

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் நவநீத கண்ணன், மும்மூா்த்தி, செல்வராஜ், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.