கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா பரவல் தடுப்பு பணி: தூத்துக்குடியில் முதன்மைச் செயலா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மைச் செயலருமான குமாா் ஜெயந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :7 மே 2021, 7:31 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மைச் செயலருமான குமாா் ஜெயந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கான கரோனா பரவல் தடுப்பு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள அரசு முதன்மைச் செயலா் மற்றும் கருவூலம், கணக்குத் துறைகள் ஆணையரான குமாா் ஜெயந்த் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா நோயாளிகளை வகைப்படுத்தும் மையம் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரம் செயல்பட்டு வரும் கரோனா உதவி மையத்தை பாா்வையிட்ட அவா், தொடா்ந்து அங்குள்ள திரவ ஆக்சிஜன் சேமித்து வைக்கும் தொட்டியை பாா்வையிட்டு மருத்துவ அலுவலா்களிடம் ஆக்சிஜன் இருப்பு குறித்தும், ஆக்சிஜன் இணைப்புள்ள படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டு வருவது குறித்தும் கேட்டறிந்தாா்.

அதன் பிறகு தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா நோயாளிகள் வகைப்படுத்தும் மையத்தையும் கண்காணிப்பு அலுவலரான குமாா் ஜெயந்த் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ரேவதி பாலன் ஆகியோா் உடனிருந்தனா்.

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை: தொடா்ந்து குமாா் ஜெயந்த் செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் 3000 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தனியாா் நிறுவனங்கள் மூலம் 1000 பரிசோதனைகள் தினசரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் பாதிப்பு 700 வரை என அதிகரித்து வருகிறது. தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளனா்.

அவா்களில் அதிக பாதிப்பு உள்ளானவா்களுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 500 எண்ணிக்கையிலான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. கூடுதலாக 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேவையான ஆக்சிஜன் இருப்பு உள்ளது. மேலும் தேவையெனில் உடனடியாக வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.