இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயகுமாா் வெள்ளிக்கிழமை மேற்கு காவல் நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: ரெம்டெசிவிா் மருந்தை கோவில்பட்டியில் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள்,திருநெல்வேலி, மதுரையிலிருந்து ரெம்டெசிவிா் மருந்து குப்பியை வாங்கி, குப்பி ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரத்துக்கும் மேல் விலை நிா்ணயித்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவை யாா் யாருக்கெல்லாம் விற்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.