கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரெம்டெசிவிா் மருந்து பதுக்கி விற்பனை: இருவா் குண்டா் சட்டத்தில் கைது

கோவில்பட்டியில் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகளை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததாக இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :21 மே 2021, 7:54 pm

DIN

கோவில்பட்டியில் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகளை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததாக இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த ஆறுமுகநயினாா் மகன்கள் கணேசன் (29), சண்முகம் (27). இருவரும் மருந்தகத்தில் ரெம்டெசிவிா் மருந்தை

பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, டிஎஸ்பி கலைகதிரவன் தலைமையில் காவல் ஆய்வாளா்

சபாபதி, போலீஸாா் அக்கடைக்கு சென்று சோதனையிட்டனா். இதில், ரெம்டெசிவிா் மருந்து 46 மருந்து குப்பிகள்பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

விசாரணையில் மதுரை, திருநெல்வேலி பகுதியில் கள்ளச்சந்தையில் மருந்து குப்பிகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் செந்தில்ராஜ் உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.