ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்செந்தூா் கோயிலில் சுவாமி அம்பு எய்தும் வேட்டை நிகழ்வு

விஜயதசமியை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அம்பு எய்தும் வேட்டை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:53 pm

DIN

விஜயதசமியை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அம்பு எய்தும் வேட்டை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு நடைபெறும் இவ்விழா, நிகழாண்டு கரோனா பொது முடக்கத்தால் கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்தபெருமான் சிறிய கேடய சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்திற்கு வந்தாா். அங்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் அம்பு எய்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கிரி வீதி வழியாக சுவாமி கோயில் சோ்ந்தாா்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) ம. அன்புமணி, தக்காா் ரா.கண்ணன் ஆதித்தன், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.