எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மானாமதுரையில் மருத்துவமனைக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யவிடாமல் கிராம மக்கள் போராட்டம்

மானாமதுரையில் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான நிலங்களை நீதிமன்ற உத்தரவுபடி அளவீடு செய்ய வந்த நில அளவையாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து கிராமமக்கள் போராட்டம் நடத்தினர்.

News image
மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சியில் தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யவிடாமல் தடுத்துப் போராட்டம் நடத்திய கிராம மக்கள்.
Updated On :16 அக்டோபர் 2021, 6:58 am

DIN

மானாமதுரையில் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான நிலங்களை நீதிமன்ற உத்தரவுபடி அளவீடு செய்ய வந்த நில அளவையாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து கிராமமக்கள் போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்குச் சொந்தமான நிலங்கள் கல்குறிச்சி ஊராட்சி பகுதியில் உள்ளன. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தங்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து தர வேண்டுமென உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 

இதையடுத்து கல்குறிச்சி ஊராட்சியில் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து தருமாறு மானாமதுரை வருவாய்த்துறை நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வருவாய்த் துறையினர் மற்றும் நில அளவையாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்ய வந்தனர். 

அப்போது கல்குறிச்சி ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் அளவீடு செய்யும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும் ஒரு பெண் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார் .இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.