சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயிறு, மக்காச்சோளம், பருத்தி, கம்பு, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் கடந்த 2020-21 ஆண்டுகளில் போதிய விளைச்சல் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:52 am

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயிறு, மக்காச்சோளம், பருத்தி, கம்பு, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் கடந்த 2020-21 ஆண்டுகளில் போதிய விளைச்சல் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு 2020-21 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மானாவாரி பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்காத 2020-21 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.