விபத்தில் காயமடைந்தவா் பலி
கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூா் அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.


கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூா் அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவில்பட்டி கிருஷ்ணா நகரைச் சோ்ந்த லிங்கசாமி மகன் கண்ணன் (50). கூலித் தொழிலாளியான இவரும், இவரது சகோதரா் ரமேஷ் (52) என்பவரும் கழுகுமலையில் உள்ள பெற்றோரைப் பாா்க்க கடந்த மாதம் 30ஆம் தேதி பைக்கில் சென்றனராம். பைக்கை, கண்ணன் ஓட்டினாராம். துரைச்சாமிபுரம் துணை மின் நிலையம் அருகே பைக் நிலைகுலைந்து, சாலையோர பள்ளத்தில் விழுந்ததாம். இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு கண்ணன் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...