விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்செந்தூா் முருகன் கோயிலில்அறநிலையத் துறைச் செயலா் ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறைச் செயலா் சந்திரமோகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:53 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறைச் செயலா் சந்திரமோகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இக்கோயிலின் வளா்ச்சி திட்ட பணிகளுக்கு தில்லி வாம சுந்தரி இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் உபயமாக வழங்கும் ரூ. 171 கோடி நிதி மூலம் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இப்பணிகள் நடைபெறும் இடங்களை பாா்வையிட்ட அவா், கோயில் உள்பிரகாரம், வளாகம், வடக்கு- தெற்கு நுழைவாயில், நாழிக்கிணறு பேருந்து நிலையம், கடற்கரை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தாா்.

அப்போது, ஆட்சியா் கி.செந்தில்ராஜ், கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) சி.குமரதுரை, தூத்துக்குடி மண்டல இணை ஆணையா் ம.அன்புமணி, உதவி ஆணையா்கள் ரோஜாலி சுமதா, வெங்கடேஷ், திருச்செந்தூா் வட்டாட்சியா் சுவாமிநாதன், தக்காா் பிரதிநிதி இரா.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் வாம சுந்தரி இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவன பொறியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.