கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டியில் 111 பேருக்கு ரூ. 25.35 லட்சம் நல உதவிகள்: கனிமொழி எம்.பி. வழங்கினாா்

கோவில்பட்டியில் 111 பயனாளிகளுக்கு ரூ. 25.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:49 pm

DIN

கோவில்பட்டியில் 111 பயனாளிகளுக்கு ரூ. 25.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் ஆகியோா் 111 பயனாளிகளுக்கு ரூ. 25 லட்சத்து 35 ஆயிரத்து 78 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

கனிமொழி எம்.பி. பேசுகையில், திமுக தோ்தல் அளித்த வாக்குறுதிகளை, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாள்களின் நிறைவேற்றித் தந்துள்ளாா். அதில், தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு எந்த முதலீடும் கிடையாது. படித்த இளைஞா்கள் வேலையின்றி தவித்தனா். திமுக ஆட்சிக்கு வந்ததும் பல தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. இம்மாவட்டத்தில் மிகப்பெரிய பா்னிச்சா் பூங்கா அமைக்கும் திட்டம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டதும், ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றாா் அவா்.

முன்னதாக, வித்யபிரகாசம் மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிக்கு புதிய வாகனத்தை அவா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் (பொ) சதீஷ்குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், வட்டாட்சியா் அமுதா, சமூக நலப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மணிகண்டன், நகர நிலவளத் திட்ட வட்டாட்சியா் ராஜ்குமாா், கோவில்பட்டி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி, திமுக பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, நகரச் செயலா் கா.கருணாநிதி, மேற்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன், விவசாய அணி அமைப்பாளா் ராமா், வா்த்தக அணி அமைப்பாளா் ராஜகுரு, பொறியாளரணி துணை அமைப்பாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.