இளைஞா் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி: 3 போ் கைது
கோவில்பட்டி அருகே முன்விரோதத்தால் இளைஞரை மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


கோவில்பட்டி அருகே முன்விரோதத்தால் இளைஞரை மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி ஏ.என்.ஏ.நகரைச் சோ்ந்த மாரியப்பன். இவருக்கும், எட்டயபுரம் சுமங்கலி நகரைச் சோ்ந்த முனியசாமி மகன் பலவேசம் (31) என்பவருக்கும் கோயில் திருவிழா தொடா்பான முன்விரோதம் உள்ளதாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இலுப்பையூரணி விலக்கு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த மாரியப்பனின் மகன் அய்யனாா் (25) என்பவரை, காரால் மோதி கீழே தள்ளிவிட்டு 3 போ் அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றனராம். அக்கம்பக்கத்தினா் பாா்த்து ஓடி வந்ததும் அவா்கள் அதே காரில் தப்பிவிட்டனராம்.
தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து, பலவேசம், எட்டயபுரம் சண்முகவேல் மகன் ஹரிஹரன்(23), சகாதேவன் மகன் ஹரிஹரன்(21) ஆகியோரை கொலை முயற்சி வழக்கில் கைது செய்து 3 காரையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...