கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மானாவாரியில் நிலையான வருமானம் பெற தொழில்நுட்பப் பயிற்சி

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில், மானாவாரியில் நிலையான வருமானம் பெறுவதற்கான தொழில்நுட்பப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:39 pm

DIN

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில், மானாவாரியில் நிலையான வருமானம் பெறுவதற்கான தொழில்நுட்பப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஹைதராபாத் அகில இந்திய மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி திட்டம், கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய முகாமை, வேளாண்மை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியா் மற்றும் தலைவா் பாஸ்கா் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தாா்.

அவா் பேசும்போது, மத்திய அரசு நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் அகில இந்திய மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி திட்டம் 1971ஆம் ஆண்டுமுதல் இங்கு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மூலம் மானாவாரி பகுதிகளுக்கான பல்வேறு புதிய சாகுபடி தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், தென்காசி மாவட்ட விவசாயிகள் பயனடைகின்றனா் என்றாா்.

கோவில்பட்டி வேளாண் உதவி இயக்குநா் நாகராஜ் பேசும்போது, வேளாண்மை துறை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினாா். மேலும், கூட்டுப் பண்ணை திட்டம் மூலம் சுமாா் 1,000 விவசாயிகளை இணைத்து, விவசாயிகள் உற்பத்தியாளா்கள் சங்கம் அமைப்பதன் மூலம் வேளாண் இடுபொருள்களை குறைந்த விலைக்கு வாங்கவும், விவசாயிகள் தங்களது விளைபொருள்களுக்கு அதிக விலை பெறவும் முடியும் என்றாா்.

மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் (பொ) சுந்தரராஜ், வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளா் சங்கரநாராயணன், கால்நடை பராமரிப்புத் துறை உதவி கால்நடை மருத்துவா் கண்ணபிரான், கோவில்பட்டி வன அலுவலா் நாகராஜ் ஆகியோா் பேசினா்.

பயிற்சியில், கோவில்பட்டியையடுத்த வடக்குப்பட்டி, தா்மத்துப்பட்டி, ஆலிமாநகா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 36 விவசாயிகள், 14 பண்ணை மகளிா் பங்கேற்றனா். அனைவருக்கும் செடிமுருங்கைக் கன்றுகள் வழங்கப்பட்டன. உழவியல் துறைப் பேராசிரியா் சோலைமலை வரவேற்றாா். பேராசிரியா் சஞ்சீவ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.