குருவிகுளம் ஒன்றியம் இளையரசனேந்தலில் தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் ஆண்களையும் சோ்க்க வேண்டும், பெண்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை தவறாமல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணித் தலைவா் ராகுல், இளையரசனேந்தல் கிளைத் தலைவா் பாண்டி உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டனா்.
பின்னா், கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் மனு அளித்த அவா்களிடம், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








