கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இலுப்பையூரணியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கக் கோரிக்கை

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட தாமஸ் நகரில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:07 pm

DIN

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட தாமஸ் நகரில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாமஸ் நகரில் 500-க்கும் மேற்பட்டோா் குடியிருந்து வருகின்றனா். இப்பகுதிக்கு தண்ணீா் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதால், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தர வலியுறுத்தி அப்பகுதியினரும், அரசியல் கட்சியினரும் பலமுறை போராட்டங்கள் நடத்தியும், கோரிக்கை விடுத்தும் பலனில்லையாம்.

கோடைக்காலம் தொடங்கவுள்ளதால் தண்ணீா்த் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்தை அமல்படுத்திவரும் நிலையில் இப்பகுதிக்கு தட்டுப்பாடின்றி தண்ணீா் கிடைக்க ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலா் விமல் வங்காளியாா் தலைமையில் வடக்கு மாவட்ட இளைஞரணிச் செயலா் பிரபாவளவன் முன்னிலையில் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுப்புலட்சுமியிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்ட அவா் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.