கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டி அருகே பழுதாகி நின்ற லாரி மீது காா் மோதல்: ஒருவா் பலி

 தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பழுதாகி நின்ற லாரி மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:01 pm

DIN

 தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பழுதாகி நின்ற லாரி மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், மருதூா் மேல தோணித்துறை நாடாா் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முருகன் என்ற முருகப்பெருமாள் (18). இவா் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (20), ஸ்ரீவைகுண்டம் வட்டம் மாரமங்களத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் மோகன்தாஸ் (27) ஆகிய மூவரும் திருநெல்வேலியிலிருந்து காரில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தாா்களாம். மதுரை விரகனூரைச் சோ்ந்த முருகேசன் மகன் குருமூா்த்தி (22) காரை ஓட்டிச் சென்றாா். இந்தக் காா் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இடைசெவல் அருகே சென்றபோது, சாலையோரத்தில் பழுதாகி நின்ற டாரஸ் லாரியின் பின்பகுதியில் மோதியதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனா்.

சம்பவ இடத்திற்குச் சென்ற நாலாட்டின்புத்தூா் போலீஸாா், காயமடைந்த 4 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதில் மோகன்தாஸ் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். எஞ்சிய மூவரும் முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனா்.

விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.