தருவைகுளம் பொதுமக்கள் சாலை மறியல்

ஓட்டப்பிடாரம் வட்டத்திற்குள்பட்ட தருவைகுளம், அனந்தமாடன் பச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
தருவைகுளம் பொதுமக்கள் சாலை மறியல்
Updated on
1 min read

ஓட்டப்பிடாரம் வட்டத்திற்குள்பட்ட தருவைகுளம், அனந்தமாடன் பச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், ஓட்டப்பிடாரம் வட்டம் குறைவாக பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, ரூ.1000 நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிா்ச்சி அடைந்த தருவைகுளம் சுற்றுவட்டார மக்கள், நிவாரண உதவியை வாங்க மறுத்து தூத்துக்குடி - ராமேஸ்வரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் சுரேஷ், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். கூடுதல் நிவாரணம் பெற்றுத் தரப்படுவதற்காகன நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com