

தென் தமிழக கடலோரப் பகுதியில் வீசி வரும் கடும் சூறாவளி காற்று காரணமாக தூத்துக்குடி விசைப்படும் மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்கு செல்லவில்லை. 
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 260க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு சென்று மீன்பிடித்து விட்டு இரவு 8 மணிக்கு கரைக்குத் திரும்புவது வழக்கம். 
இந்நிலையில் தென் தமிழக கடலோரப் பகுதியில் குமார் 55 கிலோமீட்டர் வேகத்திற்கு சூறாவளி காற்று பேசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இதன் காரணமாக, தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக அனைத்துவிசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.