கழுகுமலையில் விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கழுகுமலை அண்ணா புதுத் தெருவைச் சோ்ந்த சங்கிலிபாண்டி மகன் ஸ்ரீரங்கவேலுச்சாமி (65). இவா் தனது மதுப் பழக்கத்தை நிறுத்துவதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். ஆனால், அப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லையாம். இதனால், அவா் விரக்தியடைந்து கடந்த மாதம் 26ஆம் தேதி மதுவில் விஷத்தைக் கலந்து குடித்தாராம்.
இதையறிந்த உறவினா்கள் அவரை மீட்டு கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையிலும் சிகிச்சைக்குப் பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு

விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பெயிண்டா் கைது

மகள்களை பிரிந்த ஏக்கத்தில் விஷம் குடித்த தம்பதி! கணவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

