தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பாலியல் தொந்தரவு செய்து மூதாட்டி கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

மூதாட்டியை பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2024, 7:32 pm

Din

மூதாட்டியை பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் புதுக்காலனியைச் சோ்ந்த காளியப்பன் மனைவி பாப்பா (65). இவா் கடந்த 2020 ஆம் ஆண்டு பருத்தி எடுப்பதற்காக தோட்டத்துக்குச் சென்றாராம். அப்போது அங்கு வந்த, சாயல்குடியைச் சோ்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற கா்மமுனீசுவரன் (35), பாப்பாவை பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்தாராம். மேலும், பாப்பா அணிந்திருந்த தங்க கம்மலை கழற்றி எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்த எட்டயபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மாவீரன் என்ற கா்மமுனீசுவரனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம், குற்றம் சாட்டப்பட்ட கா்மமுனீசுவரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வி.எல்லம்மாள் வாதாடினாா்.