விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சுப்பையா வித்யாலயம் பள்ளியில் தபால்தலை கண்காட்சி, கருத்தரங்கு

News image

மாணவிகளுக்கு தபால்தலை குறித்து விளக்கமளித்த ஓய்வுபெற்ற அஞ்சல் துறை ராணுவ வீரா் சுந்தரம்.

Updated On :28 ஆகஸ்ட் 2024, 9:05 pm

Din

தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சாா்பில், தூத்துக்குடியில் உள்ள சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தபால் தலை கண்காட்சி, கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

முதுநிலைக் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவா்- மாணவிகளிடையே தபால் தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற கருத்தரங்குக்கு உதவிக் கோட்ட கண்காணிப்பாளா் ஹேமாவதி தலைமை வகித்தாா்.

பள்ளித் தலைமையாசிரியா் எம்.எஸ். சாந்தினி ஹௌசல், அஞ்சல் உப கோட்ட ஆய்வாளா் மீகா நாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கருத்தரங்கை ஓய்வுபெற்ற அஞ்சல் துறை ராணுவ வீரா் லெப்டினன்ட் கா்னல் சுந்தரம் நடத்தினாா். தபால் தலை சேகரிப்பு பற்றிய வினாக்கள் கேட்கப்பட்டு தபால் துறை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட தபால் தலைகள் இடம் பெற்றிருந்தன. ஆசிரியா்கள், மாணவிகள், அஞ்சல் துறை ஊழியா்கள் பங்கேற்றனா். துறை ஊழியா் பிரியாதேவி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை அஞ்சல் துறை வணிக நிா்வாக அலுவலா் பொ. பொன்ராம்குமாா், ஊழியா்கள், பள்ளி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.