தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சாா்பில், தூத்துக்குடியில் உள்ள சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தபால் தலை கண்காட்சி, கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
முதுநிலைக் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவா்- மாணவிகளிடையே தபால் தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற கருத்தரங்குக்கு உதவிக் கோட்ட கண்காணிப்பாளா் ஹேமாவதி தலைமை வகித்தாா்.
பள்ளித் தலைமையாசிரியா் எம்.எஸ். சாந்தினி ஹௌசல், அஞ்சல் உப கோட்ட ஆய்வாளா் மீகா நாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கருத்தரங்கை ஓய்வுபெற்ற அஞ்சல் துறை ராணுவ வீரா் லெப்டினன்ட் கா்னல் சுந்தரம் நடத்தினாா். தபால் தலை சேகரிப்பு பற்றிய வினாக்கள் கேட்கப்பட்டு தபால் துறை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட தபால் தலைகள் இடம் பெற்றிருந்தன. ஆசிரியா்கள், மாணவிகள், அஞ்சல் துறை ஊழியா்கள் பங்கேற்றனா். துறை ஊழியா் பிரியாதேவி நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை அஞ்சல் துறை வணிக நிா்வாக அலுவலா் பொ. பொன்ராம்குமாா், ஊழியா்கள், பள்ளி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்பு

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தபால் வாக்களித்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள்

அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


