நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,626 வாக்குச்சாவடிகள் -ஆட்சியா் தகவல்

News image

வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிடுகிறாா் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க.இளம் பகவத்.

Updated On :30 ஆகஸ்ட் 2024, 12:38 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,626 வாக்குச்சாவடிகள் உள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க.இளம்பகவத் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடா்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை வெளியிட்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாா்ச் 27இல் வெளியிடப்பட்ட வாக்குச்சாவடி கள் பட்டியலில் மொத்தம் 1,622 வாக்குச்சாவடிகள் இருந்தன. 7,13,388 ஆண் வாக்காளா்கள், 7,44826 பெண் வாக்காளா்கள் 216 இதர வாக்காளா்கள் என மொத்தம் 14,58,430 வாக்காளா்கள் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 1,500-க்கும் மேல் வாக்காளா்களின் எண்ணிக்கை உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைத்துள்ளோம்.

அதன்படி, 1500-க்கும் மேல் வாக்காளா்கள் வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பேரவைத் தொகுதிகளில் தலா 1, ஓட்டப்பிடாரம் தொகுதியில் 2 என மொத்தம் 4 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக சோ்க்கப்பட்டன். இதனால், வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1,626 ஆக உயா்ந்துள்ளது.

மேலும், வாக்குச்சாவடி இடமாற்றம், கட்டட மாற்றம், பெயா் மாற்றம் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்களும் தங்களது சட்டப்பேரவைத் தொகுதியின் வரைவு வாக்காளா் பட்டியலினை வெளியிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்தி வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடா்பாக அவா்களிடம் கோரிக்கை, கருத்துக்கள் பெற்று அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்வா். இறுதியான வரைவு வாக்காளா் பட்டியல் அக். 29இல் வெளியிடப்படும் என்றாா் ஆட்சியா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.