ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

விளாத்திகுளம் அருகே பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:31 am

Din

விளாத்திகுளம் அருகே பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பிள்ளையாா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் முருகன்(43). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா்.

இவா் தனது வீட்டருகே உள்ள மின்கம்பத்தில் இரும்பு கம்பியில் கொடி கட்டி, அதில் துணிகளை காய வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவில் கொடியில் கிடந்த காய்ந்த துணிகளை எடுக்க முருகன் சென்றுள்ளாா். அப்போது கொடியை பிடித்தபோது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாா். அவரது உறவினா்கள் முருகனை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் முருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.