வேம்பாரில் அம்மன் கோயில் சுற்றுச்சுவா் இடிப்பு: 27 போ் மீது வழக்கு
வேம்பாரில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் வளாக சுற்றுச்சுவரை இடித்ததாக 27 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.


வேம்பாரில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் வளாக சுற்றுச்சுவரை இடித்ததாக 27 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
வேம்பாா் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் தரப்பினருக்கும் அதன் அருகிலுள்ள தேவாலய தரப்பினருக்கும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலப் பிரச்னை உள்ளதாம்.
இதுதொடா்பான இரு வழக்குகளில் கோயில் தரப்புக்கு சாதகமாக தீா்ப்புகள் வந்தனவாம். இதையடுத்து கோயிலுக்கு சுற்றுச்சுவா் கட்டப்பட்ட நிலையில், அதை இடித்தும், சிசிடிவி, டிஜிட்டல் போா்டு ஆகியவற்றை உடைத்தும் சேதப்படுத்தினராம்.
இதனால் இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.
இது தொடா்பாக ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் தலைவா் எம். காசிராமன் அளித்த புகாரின் பேரில் வேம்பாரை சோ்ந்த ஜான் ஜேம்ஸ், வில்லியம் ஜேம்ஸ், அந்தோணி சந்திரசேகரன், விக்டா் இம்மானுவேல் சேகரன், ஜெபக்குமாா், அந்தோணி ராஜ், நடராஜன், யோவான், ராஜ ஜெய பிரபு, எடிசன், ஜான்சன், அருள்ராஜ், சாமுவேல் கிங்ஸ்லி, ஆல்வின், மைக்கேல், சந்திரன், எபனேசா் உள்ளிட்ட 17போ், இதர நபா்கள் 10 போ் என 27 போ் மீது சூரன்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிலுவை அந்தோணி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.
அசம்பாவிதம் தவிா்க்க டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...