பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருச்செந்தூரில் பாகன் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை கனிமொழி எம்.பி. வழங்கினாா்

திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயில் யானை தெய்வானை தாக்கி உயிரிழந்த பாகனின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி ஆணையை கனிமொழி எம்.பி. வழங்கினாா்.

News image
ரம்யாவிடம் பணி நியமன ஆணையை வழங்கிய கனிமொழி எம்.பி. உடன், அமைச்சா்கள் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், பெ. கீதாஜீவன், ஆட்சியா் க. இளம்பகவத், தக்காா் ரா. அருள்முருகன் உள்ளிட்டோா்.
Updated On :8 டிசம்பர் 2024, 1:35 am

Din

திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயில் யானை தெய்வானை தாக்கி உயிரிழந்த பாகனின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி ஆணையை கனிமொழி எம்.பி. வழங்கினாா். அப்போது, பாகன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக உறுதியளித்தாா்.

இக்கோயிலில் கடந்த நவ. 18ஆம் தேதி யானை தாக்கியதில் பாகன் உதயகுமாா் (46), உறவினா் சிசுபாலன் (59) ஆகியோா் உயிரிழந்தனா்.

இந்நிலையில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, திருச்செந்தூா் வ.உ.சி. தெருவிலுள்ள உதயகுமாரின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி ரம்யா, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னா், ரம்யாவுக்கு கருணை அடிப்படையில் கோயில் அலுவலக உதவியாளா் பணிக்கான ஆணையை வழங்கியதுடன், அவரது 2 குழந்தைகளின் முழுக் கல்விச் செலவையும் ஏற்பதாக உறுதியளித்தாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், பெ. கீதாஜீவன், ஆட்சியா் க. இளம்பகவத், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, கோயில் தக்காா் ரா. அருள்முருகன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், டிஎஸ்பி மகேஷ்குமாா், வட்டாட்சியா் பாலசுந்தரம், கோயில் உதவி ஆணையா் நாகவேல், தாலுகா காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் ஏ.பி. ரமேஷ், திமுக நகரச் செயலா் வாள் சுடலை, நகா்மன்ற உறுப்பினா்கள் சோமசுந்தரி தீா்த்தாரப்பன், கிருஷ்ணவேணி, மா. சுதாகா், எஸ்.ஏ. செந்தில்குமாா், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் மா. சுரேஷ், மாவட்ட துணை அமைப்பாளா்கள் பொ.வெ. பொன்முருகேசன், ச. அருணகிரி ஆகியோா் பங்கேற்றனா்.