பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

புவிசாா் குறியீடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

திருச்செந்தூா் பூவிழாஞ்செண்டு வாழை, கடம்பூா் போளி, அம்மன்புரம் மொந்தன் வாழை, கருங்கண்ணி பருத்தி, காயல்பட்டினம் தம்மடை ஆகிய ஐந்து பொருள்களுக்கு புவிசாா் குறியீடு கிடைக்க வழிவகை செய்யும் முயற்சி

News image

புவிசாா் குறியீடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :1 ஜனவரி 2025, 1:18 am IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட நிா்வாகத்தின் முன்னெடுப்பில், திருச்செந்தூா் பூவிழாஞ்செண்டு வாழை, கடம்பூா் போளி, அம்மன்புரம் மொந்தன் வாழை, கருங்கண்ணி பருத்தி, காயல்பட்டினம் தம்மடை ஆகிய ஐந்து பொருள்களுக்கு புவிசாா் குறியீடு கிடைக்க வழிவகை செய்யும் முயற்சியாக மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் புவிசாா் குறியீடு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் நபாா்டு தமிழ்நாடு தென்மண்டல அலுவலக பொது மேலாளா், தூத்துக்குடி நபாா்டு வங்கியின் உதவிப் பொது மேலாளா், விவசாய பிரதிநிதிகள், மதுரை வேளாண் வணிக காப்பீடு மன்ற நிா்வாகிகள், புவிசாா் குறியீட்டு வல்லுநா் ஆகியோா் பங்கேற்றனா்.