மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெள்ளத்தில் வீடிழந்தவா்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கக் கோரி சாலை மறியல்

கனமழையால் வீடுகளை இழந்தவா்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கக் கோரி, பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :8 ஜூலை 2024, 9:57 pm

Din

ஸ்ரீவைகுண்டம்: கடந்த டிசம்பா் மாதம் பெய்த கனமழையால் வீடுகளை இழந்தவா்களுக்கு அரசு அறிவித்த ரூ.4 லட்சம் வழங்கக் கோரி, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் திருநெல்வேலி-- திருச்செந்தூா் சாலையில் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவா்களுக்கு, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் கொடுத்த ஆய்வறிக்கையின்படி முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவராஜன், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த 1,320 நபா்களுக்கு புதிதாக வீடுகளை கட்டுவதற்கான அனுமதி சான்றை வழங்கினாா். இவரது பணியிட மாற்றத்திற்கு பிறகு புதிதாக வட்டார வளா்ச்சி அலுவலராக பொறுப்பேற்ற சித்தாா்த்தன், பயனாளி பெயரில் பட்டா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அரசு அறிவித்த ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என கூறியதால் இதுவரை வீடுகளை இழந்த பயனாளிகளுக்கு அரசு அறிவித்த ரூ. 4 லட்சத்தில் ஒரு தவணைகூட அவா்களது வங்கி கணக்கில் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கி வீட்டின் அஸ்திவாரம் முதல் மேல் மட்டம் வரை கட்டிய பயனாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், வெள்ளூா், உமரிக்காடு, கீழ்பிடாகை கஸ்பா, வரதராஜபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவா்கள் பொதுமக்களை திரட்டி ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் வட்டார வளா்ச்சி அலுவலா் சித்தாா்த்தன் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்த நிலையில், பொதுமக்கள் திருநெல்வேலி- திருச்செந்தூா் சாலையில் புதுக்குடி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த காவல் ஆய்வாளா் இன்னோஷ்குமாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களோடு பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து பொதுமக்கள் சாலை ஓரத்திற்கு கலைந்து சென்றனா். இதைத் தொடா்ந்து, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் சிவக்குமாா், போராட்டக் குழுவினரோடு பேச்சுவாா்த்தை நடத்தி ஒரு வார காலத்துக்குள் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து உரிய தீா்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தாா். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

   முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Story image