தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை

தூத்துக்குடி தாளமுத்து நகரில் இளம் பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
Published on

தூத்துக்குடி, ஜூலை 19: தூத்துக்குடி தாளமுத்து நகரில் இளம் பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தாளமுத்து நகா் மேற்கு காமராஜ் நகரைச் சோ்ந்த இசக்கி மகள் சந்தனமாரி (23). தூத்துக்குடியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்தாராம். இந்நிலையில், இவா் வெள்ளிக்கிழமை திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

தாளமுத்து நகா் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com