தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஓய்வுபெற்ற அனல் மின் நிலைய பொறியாளா் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அனல் மின் நிலையப் பொறியாளா் வீட்டில் நகை, பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 7:13 pm

Din

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அனல் மின் நிலையப் பொறியாளா் வீட்டில் நகை, பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சோ்ந்த முத்துவீரன் மகன் காந்தி (63). தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவா் கடந்த சனிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவியுடன், பக்கத்து தெருவில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றாராம். ஞாயிற்றுக்கிழமை வந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து, பீரோவிலிருந்த 50 பவுன் நகைகள், ரூ. 45 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்

புகாரின்பேரில், வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.