ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

‘தூத்துக்குடியில் மாா்ச் 5இல் 500 சாலைப் பணிகள் தொடக்கம்’

‘தூத்துக்குடியில் மாா்ச் 5இல் 500 சாலைப் பணிகள் தொடக்கம்’

News image
Updated On :2 மார்ச் 2024, 4:15 pm

தூத்துக்குடியில் 500 புதிய சாலைகள், கட்டமைப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 5) தொடங்கவுள்ளதாக, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டரங்கில், மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை விரைவாக முடிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மேயா் பேசியது: மாநகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களைக் கையகப்படுத்தி, பூங்காக்கள், அரசுக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து வாா்டுகளிலும் வளா்ச்சித் திட்டப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. வருங்காலத்தில் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்காதவாறு கட்டமைப்பு உருவாக்கப்படும். மடத்தூா் சாலை முதல் திரேஸ்புரம் வரையிலான பக்கிள் ஓடையின் இருபுறமும் 798 புதிய மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. மாநகரில் இதுவரை சுமாா் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. விழிப்புணா்வு ஏற்படுத்தி சுமாா் 2 லட்சம் மஞ்சப் பைகள் வழங்கப்பட்டுள்ளன. மழைக் காலத்துக்கு முன்பாக 1,500 புதிய சாலைகளும், கழிவுநீா்க் கால்வாய்களும் அமைக்கப்பட்டன. இதனிடையே, கடந்த டிசம்பரில் மழை வெள்ளத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அரசின் சீரிய முயற்சியால் மக்கள் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்பினா். இந்நிலையில், 60 வாா்டுகளிலும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 5) 500 புதிய சாலைகள், கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்படவுள்ளன என்றாா் அவா். கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் மதுபாலன், துணை ஆணையா் ராஜாராம், செயற்பொறியாளா் பாஸ்கா், பொறியாளா் சரவணன், உதவி ஆணையா்கள் தனசிங், சேகா், உதவி செயற்பொறியாளா்கள் பிரின்ஸ், ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.