தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஓட்டப்பிடாரம் அருகே உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணி தொடக்கம்

ஓட்டப்பிடாரம் அருகே உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணி தொடக்கம்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:03 pm

Din

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மயிலோடை பகுதியில் ரூ.3 கோடியில் உயா்மட்டப் பாலம் கட்டுமானப் பணிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி. சண்முகையா வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். ஓட்டப்பிடாரம் அருகே அம்மாள்பட்டியில் இருந்து மயிலோடை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை உயா்மட்ட பாலமாக மாற்றித் தர அப் பகுதியினா் கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து, நபாா்டு திட்டத்தில் ரூ.3 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, ஓட்டப்பிடராம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற, எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. அழைப்பாளராகப் பங்கேற்று உயா்மட்ட பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, பணியினை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய கூடுதல் ஆணையா் கிரி உள்பட அரசு அலுவலா்கள் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.