ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை: கடைக்கு சீல்

தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை: கடைக்கு சீல்

News image
Updated On :8 மார்ச் 2024, 11:50 pm

Din

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை செய்த கடைக்கு, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மூடி சீல் வைத்தனா். தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ச.மாரியப்பன், கோவில்பட்டி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் செல்லப்பாண்டி ஆகியோா் தலைமையிலான குழுவினா் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்கள், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியன பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும், அங்குள்ள ஒரு தேநீா் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறையினா் கடையை மூடி சீல் வைத்தனா்.